Friday, 14 May 2021

யாப்பிலக்கணம் Question And Answer - 01

1. செய்யுள் இயற்றுவதற்குப் பயன்படும் உறுப்புகள் எத்தனை?

அ) ஐந்து 
ஆ) ஆறு 
இ) நான்கு 
ஈ) மூன்று

2. அசைக்கு உறுப்பாகும் எழுத்துக்கள் எத்தனை?

அ) பத்து 
ஆ) எட்டு 
இ)பதினொன்று 
ஈ) பதிமூன்று

3. தொடை தொடை விகற்பம் எத்தனை வகைப்படும்?

அ) 22 
ஆ) 43 
இ) 35 
ஈ) 37

4. எழுத்துக்கள் தனியாகவோ, பல எழுத்துக்கள் சேர்ந்தோ நிற்பது

அ) அசை 
ஆ) சீர் 
இ) தளை 
ஈ) தொடை

5. குறில் தனித்து எவ்விடத்தில் வரும்

அ) முதல் 
ஆ) இடை 
இ) கடை 
ஈ) எவ்விடத்தும

6. வெண்பாவின் ஈற்றுச் சீராய் வருவது

அ) ஓரசைச்சீர் 
ஆ) ஈரசைசீர் 
இ) மூவசைச்சீர் 
ஈ) நாலசைச்சீர்

7. ஆசிரியப்பாவிற்கு உரிய சீர்

அ) ஓரசைச்சீர் 
ஆ) ஈரசைசீர் 
இ) மூவசைச்சீர்
ஈ) நாலசைச்சீர்

8. அகவற்சீரின் மற்றொரு பெயர்

அ) இயற்சீர் 
ஆ) காய்ச்சீர் 
இ) கனிச்சீர் 
ஈ) அசைச்சீர்

9. ஈரசைச்சீர் இறுதியில் நேர் என முடிவது

அ) நேர்ச்சீர் 
ஆ) நிரைச்சீர் 
இ) காய்ச்சீர் 
ஈ) கனிச்சீர்

10. வெண்பா உரிச்சீர் எனப்படுவது

அ) இயற்சீர் 
ஆ) காய்ச்சீர் 
இ) கனிச்சீர் 
ஈ) அசைச்சீர்

1 comment:

  1. அருமையான வினா பகுதி

    ReplyDelete