Breaking

Sunday 14 April 2024

April 14, 2024

ஒரு தனிநபர் ரூ.10 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை செய்தால் ஐடி நோட்டீஸ் வரும் இது தெரியுமா உங்களுக்கும்?

ஒரு தனிநபர் அதிக மதிப்புள்ள ரொக்கப் பரிவர்த்தனைகளைச் செய்தால், வருமான வரித் துறையின் நோட்டீசை (Income Tax Notice) பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

மாத வருமானம், மற்ற வகைகளில் வருமானம் பெறக்கூடியவர்கள் எல்லோரும் வருமான வரி செலுத்த வேண்டும். இதையடுத்து ஒவ்வொரு வருடமும் ஜூன் - ஜூலை மாதங்களில் இந்த வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டும்.

மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (சிபிடிடி) விதிகளின்படி, ஒரு நிதியாண்டில் ஒருவர் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால், அது வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும். இந்தப் பணம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கலாம். இப்போது நீங்கள் நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பணம் டெபாசிட் செய்வதால், இந்த பணத்தின் ஆதாரம் குறித்து வருமான வரித்துறை உங்களிடம் விளக்கம் கேட்கலாம்.

கார்டு நிலுவைத் தொகைக்கு ரூ.1 லட்சம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு மேற்பட்டவை கண்காணிக்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஒரு நிதியாண்டில் 10 லட்சங்கள் அல்லது அதற்கும் மேல் கிரெடிட் கார்டு பில்களை செட்டில் செய்தால் அதற்கு கணக்கு காட்ட வேண்டும். இல்லையென்றால் அதற்கும் நோட்டிஸ் அளிக்கப்படும். உங்கள் கிரெடிட் கார்டு தகவல் உங்கள் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதால் வரி அதிகாரிகள் உங்கள் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க முடியும். உங்கள் கிரெடிட் கார்டு தகவலுடன் பான் கார்டை இணைப்பதன் மூலம் நீங்கள் ஆன்லைனில் செலவழிக்கும் தொகையை அரசு உடனடியாகக் கண்காணிக்க முடியும். ITR (வருமான வரி அறிக்கை) சமர்ப்பிக்கும் போது இந்த பரிவர்த்தனை விவரங்களையும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

ரியல் எஸ்டேட் வர்த்தகம் செய்யும் போது, 30 லட்ச ரூபாய்க்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்வது நல்லதல்ல என்பதை தனிநபர்கள் அறிந்திருக்க வேண்டும்.இத்தகைய சூழ்நிலையில், இவ்வளவு பெரிய பரிவர்த்தனை காரணமாக, நீங்கள் பணத்தை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் என்று வருமான வரித்துறை கேட்கலாம்.

ஒரே டிரான்சாக்ஸனில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யக்கூடிய தொகை ரூ. 10 லட்சம். வருமான வரித்துறை, ரூ.100000க்கு மேல் முதலீடு செய்யும் சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளருக்கு நோட்டீஸ் அனுப்பும். அதேபோல் வங்கிக் கணக்கிலிருந்து 10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக எடுத்தாலோ, போட்டாலோ அதற்கு கணக்கு காட்ட வேண்டும். இல்லையென்றால் நோட்டீஸ் வழங்கப்படும்.

பங்குகள், பரஸ்பர நிதிகள், கடன் பத்திரங்கள் அல்லது பத்திரங்கள் வாங்க அதிக அளவு பணம் பயன்படுத்தப்பட்டால், இது வருமான வரித் துறையையும் எச்சரிக்கிறது. ஒருவர் ரூ.10 லட்சம் அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனை செய்தால், அதன் தகவல் வருமான வரித்துறைக்கு சென்றடைகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பணத்தை எங்கிருந்து கொண்டு வந்தீர்கள் என்று வருமான வரித்துறை உங்களிடம் கேட்கலாம்.
April 14, 2024

சரும அழகிற்காக பயன்படுத்தும் கிரீம்களால் சிறுநீரக பிரச்சனை ஏற்படும்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்


தற்போதைய காலகட்டத்தில் பெண்கள், ஆண்கள் என அனைவருமே தங்களை அழகாக காட்டிக் கொள்ள அதிகளவிலான அழகுசாதன பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர்.

சன் கிரீம், ஸ்கின் கிரீம், பவுண்டேஷன் என எக்கச்சக்கமான அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி தங்களை அழகுபடுத்திக் கொள்கின்றனர். இந்த அழகு சாதன பொருட்களின் பின்னணியில் இருக்கும் ஆபத்து பற்றி ஒரு அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவின் மூலம் தெரியவந்துள்ளது.

அதன்படி அதிகளவில் சருமத்திற்கான கிரீம்களை பயன்படுத்துவதால் சிறுநீரக பிரச்சனை ஏற்படும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அந்த கிரீம்களில் அதிகளவிலான மெர்குரி(பாதரசம்) இருப்பதனால் அது சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் Membranous Nephropathy என்கிற நோய் பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

Membranous Nephropathy என்பது தன்னுடல் தாக்க நோயாகும், இதனால் சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டு சிறுநீரில் அதிகப்படியான புரதம் வெளியேறக்கூடுமாம். Membranous Nephropathy நோய் பாதிப்பு உள்ள 22 பேரை வைத்து இந்த ஆய்வை நடத்தி உள்ளனர். அதில் 15 பேருக்கு அரியவகை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு அவர்களில் 13 பேர் சரும அழகிற்காக கிரீம்களை பயன்படுத்திய பின்னர் தான் தங்களுக்கு இந்த நோய் அரிகுறி வந்ததாக கூறி இருக்கின்றனர்.

இதே நிலை நீடித்தால் இது ஒரு பொது சுகாதார அபாயத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும், இதுபோன்ற பொருட்களை பயன்படுத்துவதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். அழகுக்காக பயன்படுத்தும் பொருட்களில் இப்படி இரு ஆபத்து ஒளிந்திருப்பது பலரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Saturday 13 April 2024

April 13, 2024

சியா விதைகள் கலந்த மோர்... இதை விட சிறந்த ப்ரோபயோடிக் உணவு எதும் இல்லை!


கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் அதே வேளையில், ஆரோக்கியத்தையும் சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும், சில உணவுகளில் மோர் முதலிடம் பிடிக்கிறது.

அதிலும், சில உணவௌ பொருட்களை அதனுடன் சேர்க்கும் போது, வியக்க வைக்கும் பலன்களை பெறலாம். சில உணவுகளின் கூட்டனி, அதனை சூப்பர் உணவின் அந்தஸ்தை கொடுக்கும். அத்தகைய ஒரு அற்புதமான கலவை தான் சியா விதைகள் மற்றும் மோர். சியா விதைகள் கலந்த மோர், உங்களுக்கு முழுமையான ஊட்டச்சத்தை அளிப்பது மட்டுமல்லாமல் உடல் வலிமையையும் தருகிறது. இது கோடை காலத்திற்கான சிறந்த பானமாக இருக்கும். மிக சிறந்த ஆரோக்கியமான ப்ரோபயாடிக் உணவினை உட்கொள்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.

1. ஊட்டச்சத்த்தின் களஞ்சியம்

உடல் சீராக செயல்படவும் ஆரோக்கியமாக இருக்கவும் (Health Tips) ஊட்டச்சத்து தேவை. சியா விதைகளில் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மோரில் ரிபோஃப்ளேவின், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. எனவே, அவை உங்களுக்கு முழுமையான ஊட்டச்சத்தை அளிக்கின்றன.

2. எடை இழப்புக்கான சிறந்த பானம்

உடல் எடையை சட்டென்று குறைக்க விரும்பினால், சியா விதைகளால் கலந்த மோர் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இரண்டு சூப்பர்ஃபுட்களும் அதிக நார்ச்சத்து நிறைந்தவை. உங்களுக்கு வயிறு நிறைந்த உனர்வைத் தரும். மேலும் நீண்ட நேரம் பசி ஏற்படாது. கூடுதலாக, இவற்றில் மிகக் குறைவான கலோரிகளே உள்ளன.

3. செரிமானம் மேம்படும்

மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், பெரும்பாலானோர் செரிமான பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், சியா விதைகள் கலந்த மோர் மிகச் சிறந்தது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பலன் தெரியும். அதிக நார்ச்சத்து இருப்பதால் வயிற்றை நன்கு சுத்தம் செய்கிறது. மோரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் குடலை ஆரோக்கியமாக்கும்.

4. ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்

சியா விதைகளில் இருந்து கிடைக்கும் மோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இது கார்போஹைட்ரேட்டுகளை சர்க்கரையாக மாற்றும் செயல்முறையை மந்தமாக்குகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். இது நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.

5. இதயம் ஆரோக்கியம்

சியா விதைகளின் மோர் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில் ஏராளமான ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது வீக்கத்தைக் குறைக்கிறது. ஆரோக்கியமான இந்த சூப்பர் மோர் மூலம் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும். இதில் கொழுப்பு குறைவாக இருப்பதால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளது.

6. நீர்சத்தை அள்ளி வழங்கும்

கோடைக்காலத்தில் உடலில் நீர் சத்து குறையாமல் வைத்திருப்பது மிகவும் அவசியம். சியா விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த ஆரோக்கியமான மோர் இந்த வேலையை திறன்பட செய்கிறது. இந்த மோர் உங்கள் உடலின் திரவ சமநிலையை பராமரிக்கிறது. இது உங்களுக்கு ஆற்றலையும் அள்ளித் தருகிறது.

7. நினைவாற்றல்

சியா விதைகளின் மோர் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. சியா விதைகளில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. இதில் உள்ள மெக்னீசியம் தூக்கத்தை மேம்படுத்துகிறது. இந்த மோர் உங்கள் நினைவாற்றலைக் கூர்மைப்படுத்தி, கவனச் சிதறல் ஏற்படாமல் பாதுகாத்து, மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

8. எலும்புகள் ஆரோக்கியம்

வலுவான எலும்புகளுக்கு கால்சியம் சத்து அவசியம். சியா விதைகள் மோர் கால்சியத்தின் நிறைந்துள்ளது. சியா விதைகள் மற்றும் மோர் பானத்தை தினசரி அருந்துவது எலும்புகளை பலப்படுத்துகிறது. ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைக்கிறது.
April 13, 2024

4 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 21-ம் தேதி வரை தொடர் விடுமுறை..!

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது.
தொடர்ந்து 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் பருவத் தேர்வுகள் ஏப்.2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேர்வுகள் தள்ளிவைப்பு: இதில் 1 முதல் 3-ம் வகுப்பு வரையான குழந்தைகளுக்கு ஏப்.5-ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்து, 6-ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங் கப்பட்டுள்ளது.

அதேநேரம் ரம்ஜான் பண்டிகைகாரணமாக 4 முதல் 9-ம் வகுப்புமாணவர்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்தேர்வுகள் ஏப்.22, 23-ம் தேதி களுக்கு தள்ளிவைக்கப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு நேற்றுடன் முடிவடைய இருந்த முழு ஆண்டுத் தேர்வுகள் சற்று தள்ளிப்போனது.

இதற்கிடையே மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பெரும்பாலான பள்ளிகள் தேர்தல் முகாம்களாக செயல்பட இருக்கின்றன. மேலும், ஆசிரியர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதையடுத்து 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (ஏப்.13) முதல் 21-ம் தேதி வரை 9 நாட்கள் தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஆசிரியர்கள் வாரவிடுமுறை, மற்றும் தேர்தல் விடு முறை தவிர்த்து மற்ற நாட்களில் பள்ளிக்கு வரவேண்டும்.

2 மாதம் கோடை விடுமுறை: மாணவர்கள் மீண்டும் ஏப்.22, 23-ம் தேதிகளில் பள்ளிக்கு தேர்வெழுத வரவேண்டும். அதன்பின் மாணவர்களுக்கு கோடை விடுமுறை வழங்கப்பட உள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியான பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என்பதால் 2 மாதம் வரை கோடை விடுமுறை விடப்படும் என துறைசார்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Friday 12 April 2024

April 12, 2024

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000: அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இம்மாதம் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வருமா என்ற கேள்வி எழுந்த நிலையில் மகளிர் உரிமை தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் இல்லை என்று தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை தொடரலாம் என்று தேர்தல் விதிகள் உள்ளன. எனவே தேர்தல் ஆணையத்தில் எந்த அனுமதியும் பெற தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஏப்ரல் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வருவது உறுதியாகி உள்ளது.

Thursday 11 April 2024

April 11, 2024

கோடை வெயில் ஆரம்பிச்சாச்சு!! சுகாதார அமைச்சகம் வழங்கிய உணவு ஆலோசனைகள்..!

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து, தற்போதைய வெப்ப அலை காலத்தை எதிர்த்துப் போராட இந்திய சுகாதார அமைச்சகம் உணவு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வுத் மையம் ஏப்ரல் முதல் ஜூன் வரை பல மாநிலங்களில் வெப்ப அலைகளுக்கான எச்சரிக்கைகளை வெளியிட்டு வருகிறது. கோடை வெயிலில் இருந்து உடலை பாதுகாக்க உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை சரிசெய்தல் மிகவும் முக்கியமானது. இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி,

மதிய வேளையில் சமைப்பதைத் தவிர்க்கவும் : மதிய வேளைகளில் சமைப்பதால் உட்புற வெப்பநிலை அதிகரிக்கும், வெப்பமான பகுதிகளில் சமைப்பதையும், மதிய வேளைகளில் சமைப்பதை தவிர்க்குமாறு ஆலோசனையில் பரிந்துரைக்கப்பட்டது.

சரியான காற்றோட்டத்தை உறுதி செய்யுங்கள் : சமையலில் புகை, நீராவி போன்றவை வெளிவருவதால் தோல் மற்றும் சுவாச பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். இதை நிவர்த்தி செய்ய, ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறந்து, சிறந்த காற்றோட்டத்தை ஏற்படுத்த வேண்டும்.

அதிகப் புரதச்சத்து உள்ள உணவுகளை உண்ணுதல் : அதிக வெப்பத்தால் உடல் நீரினை இழப்பதால், அதிக புரதச்சத்து உள்ள உணவுகளை உண்ண வேண்டும். இதன் விளைவாக, உகந்த நீரேற்றம் அளவை பராமரிக்க மற்றும் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்க அதிக புரத உணவுகளை உட்கொள்வதற்கு எதிராக ஆலோசனை அறிவுறுத்துகிறது.

காஃபின் மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்களை தவிர்த்தல் : காஃபின் கொண்ட பானங்கள், டீ மற்றும் காபி, அத்துடன் கார்பனேற்றம் செய்யப்பட்ட சர்க்கரை பானங்கள், டையூரிடிக்களாக செயல்படுகின்றன, உடலில் இருந்து திரவ இழப்பை அதிகரிக்கின்றன மற்றும் நீரிழப்பு அபாயத்தை அதிகரிக்கின்றன. எனவே, திரவ இழப்பைக் குறைக்கவும், போதுமான நீரேற்றத்தை பராமரிக்கவும் இந்த பானங்களின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துமாறு ஆலோசனை பரிந்துரைக்கிறது.

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், கோடை வெயிலினால் ஏற்படும் சவால்களை சிறப்பாகச் சமாளிக்க முடியும், வரவிருக்கும் மாதங்களில் தங்கள் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் உறுதிசெய்ய முடியும்.
April 11, 2024

10th, ITI முடித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்புப் படையில் வேலை...!!!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லை பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது

நிறுவனம்: BSF
பணிகள்: கான்ஸ்டபிள்
காலியிடங்கள்: 38
கல்வித் தகுதி: 10 வது தேர்ச்சி, ஐடிஐ தேர்ச்சி
வயது வரம்பு: 18 முதல் 25 வரை
சம்பளம்: ரூ. 21,700 – 69,100 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.04.2024
விண்ணப்பிக்கும் முறை: https://rectt.bsf.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Tuesday 9 April 2024

April 09, 2024

8th TAMIL தமிழ் மொழி வாழ்த்து

1. ‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி’ இத்தொடரில் ‘நிரந்தரம்‘ என்பதன் பொருள்.

அ. எப்பொழுதும்

ஆ. காலம் முழுமையும்

இ. அழியாத ஒன்று

ஈ. இவற்றுள் எதுவுமில்லை

2. ‘ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி’ இத்தொடரில் ‘வைப்பு‘ என்பதன் பொருள்.

அ. நிலப்பகுதி

ஆ. வைப்புத்தொகை

இ. வைத்தல்

ஈ. இவற்றுள் எதுவுமில்லை

3. ‘வண்மொழி வாழியவே’ இத்தொடரில் ‘வண்மொழி‘ என்பதன் பொருள்.

அ. வலிமையான மொழி

ஆ. வளமிக்க மொழி

இ. அழியாத மொழி

ஈ. இளமையான மொழி

4. பாரதியார் குறித்து பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

அ. விடுதலைப் போராட்ட வீரர்

ஆ. சமுகச் சீர்த்திருத்தச் சிந்தனையாளர்

இ. இதழாளர்

ஈ. பேச்சாளர்

5. கீழ்க்கண்டவற்றுள் பாரதியாரை, பாவேந்தர் புகழாத ஒன்றைத் தேர்வு செய்க.

அ. சிந்துக்குத் தந்தை

ஆ. செந்தமிழ்த் தேனீ

இ. புதிய அறம்பாட வந்த அறிஞன்

ஈ. புதுமைக் கவிஞர்

6. ‘செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும், நந்தா விளக்கனைய நாயகியே’ என்ற அடிகளைக் கொண்ட நூல்.

அ. முத்தமிழ் அந்தாதி

ஆ. செந்தமிழ் அந்தாதி

இ. பைந்தமிழ் அந்தாதி

ஈ. தமிழ்மொழி அந்தாதி

6. ‘செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும், நந்தா விளக்கனைய நாயகியே’ என்று பாடியவர்.

அ. பாரதியார்

ஆ. து. அரங்கன்

இ. பாரதிதாசன்

ஈ. செந்தமிழ் அந்தணர்

7. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

அ. கடல்

ஆ. பரவை

இ. ஆழி

ஈ. வைப்பு

8. கீழ்வருவனவற்றுள் பாரதியார் குறித்து, சரியன கூற்று அல்லாத ஒன்றைக் கண்டறிக.

அ. இந்தியா, விஜயா, குயில் முதலான இதழ்களை நடத்தினார்

ஆ. சந்திரிகையின் கதை, தராசு என்பன உரைநடை நூல்கள்.

இ. மறம் பாட வந்த மறவன் என்று பாரதிதாசனால் புகழப்பட்டவர்

ஈ. வசன கவிதையின் தந்தை பாரதியார்.

9. பாரதியார் நடத்திய இதழின் பெயர்.

அ. நறுமலர்

ஆ. குயில்

இ. விஜயா

ஈ. இவற்றுள் எதுவுமில்லை

10. பாரதியாரின் வசன கவிதைக்கு வித்திட்ட நூல்.

அ. புல்லின் இதழ்கள்

ஆ. காட்சி

இ. நகரம்

ஈ. குடியாட்சி

Thursday 6 October 2022

October 06, 2022

ஆன்லைனில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்பது எப்படி? வாங்க பார்க்கலாம்...!

சொத்து வாங்குபவர்கள் அந்த சொத்தை தன் பெயருக்கு பத்திரப் பதிவு செய்தவுடன் அடுத்தபடியாக, அந்த சொத்தின் பட்டாவை மாற்றம் செய்ய வேண்டும்.

சொத்து பதிவின் போதே பட்டா மாறுதலுக்கு பணமும் கட்டப்பட்டு விடுகிறது. ஆனால், பல நேரங்களில் பட்டா கிடைப்பதில்லை.

இந்த நிலையில், பத்திரப் பதிவு செய்யப்பட்ட சொத்து எந்த தாலுகா எல்லைக்கு உட்பட்டது என்பதை அறிந்து, அந்த பகுதி தாலுகா அலுவலகத்தில் பட்டா மாற்றத்துக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டி இருக்கிறது. அதற்கான விண்ணப்பங்கள் மட்டுமே இணையதளத்தில் கிடைக்கின்றன.

தற்போது அதை எளிமைப்படுத்த புதியதாக தமிழ்நிலம் எனும் இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதலுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நிலம் tamilnilam.tn.gov.in.citizen இணையதளத்தில் பெயர், செல்போன், இ-மெயில் முகவரியை பதிவு செய்து உள்ளே செல்ல வேண்டும்.


பட்டா மாறுதல் யார் விண்ணப்பிக்கலாம்?

பட்டா மாறுதல் கோரும் எந்த ஒரு குடிமகனும் விண்ணப்பிக்கலாம்.

பட்டா மாறுதல் வகைகள் யாவை?

1. உட்பிரிவுள்ள இனங்கள்

2. உட்பிரிவு அல்லாத இனங்கள்

தேவைப்படும் ஆவணங்களின் விவரம் :

(இணைப்பின் அளவு 3 Bmக்கு மிகாமல் இருக்க வேண்டும்.)

1. கிரயப் பத்திரம்

2. செட்டில்மென்ட் பத்திரம்

3. பாகப்பிரிவினை பத்திரம்

4. தானப் பத்திரம்

5. பரிவர்தனை பத்திரம்

6. விடுதலைப் பத்திரம்

இந்த இணையதளம் மூலம் உட்பிரிவு, செயலாக்க கட்டணங்களை இணைய வழியிலேயே செலுத்த ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. கட்டணங்கள் செலுத்தப்பட்டதும் நில அளவர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் வேலைக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டு விடும்.

பட்டா மாறுதல் தொடர்பான பணிகளை முடிக்கும் வகையில் சாப்ட்வேரில் சொத்து தொடர்பான பல்வேறு கேள்விகள் இடம்பெற்றுள்ளன.

ஏற்கனவே உள்ள இணையதள பட்டாவில் சொத்தை கிரயம் முடித்து கொடுப்பவரின் பெயர் சரியாக உள்ளதா? சர்வே எண், உட்பிரிவு எண், கிரய பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள இடம் ஆகியவை இணையதள சிட்டாவில் குறிப்பிட்டுள்ளபடி சரியாக உள்ளதா? வில்லங்கம் ஏதேனும் உள்ளதா? என்பன போன்று 5 கேள்விகளுக்கான பதிலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த நடைமுறை முடிந்ததும் தானாகவே இணையதளத்தில் பட்டா மாறுதல் செய்து பதிவேற்றம் செய்யப்பட்டு விடும். பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ள விவரம், கிரயம் முடித்து கொடுத்தவர் மற்றும் கிரயம் பெற்றவர்கள் பத்திரப் பதிவின் போது அளித்த செல்போன் எண்களுக்கு அனுப்பப்படும்.

கிரயம் முடித்தவர்கள் https://eservices.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து பட்டாவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பத்திரப் பதிவின் போது இ-மெயில் முகவரி அளித்திருந்தால் அந்த முகவரிக்கு பட்டா அனுப்பி வைக்கப்படும்.
October 06, 2022

இந்த 4 இருமல் மற்றும் சளி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் - WHO எச்சரிக்கை

4 இருமல் மற்றும் சளி மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை. மெய்டன் பர்மாசூட்டிக்கல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மற்றும் சளி சிரப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என உலக சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக உலக சுகாதார அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ஆப்ரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகளின் உயிரிழப்புக்கு அந்நிறுவனத்தின் இருமல் மற்றும் சளி மருந்து காரணமானதால் பயன்பாட்டிலிருந்து அகற்ற அறிவுறுத்தியுள்ளது. இந்த மருந்துகள் அவை கடுமையான சிறுநீரக பிரச்னையை ஏற்படுத்துவதாக கூறியுள்ளது. அசுத்தமான பொருட்கள் இதுவரை காம்பியாவில் மட்டுமே கண்டறியப்பட்டாலும், அவை மற்ற நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டிருக்கலாம்.

நோயாளிகளுக்கு மேலும் தீங்கு விளைவிப்பதைத் தடுக்க அனைத்து நாடுகளும் இந்த தயாரிப்புகளைக் கண்டறிந்து அவற்றை புழக்கத்தில் இருந்து அகற்றுவதை WHO பரிந்துரைக்கிறது. இந்த நான்கு மருந்துகள் இருமல் மற்றும் சளி சிரப்கள், இந்தியாவில் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் தயாரிக்கபடுகிறது என தெரிவிக்கப்ட்டுள்ளது. காம்பியாவில் 66 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்ததைத் தொடர்ந்து, ஹரியானாவை தளமாகக் கொண்ட ஒரு மருந்து நிறுவனம் தயாரித்த நான்கு இருமல் சிரப்கள் குறித்து அரசாங்கம் விசாரணையைத் தொடங்கியுள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உயர்மட்ட வட்டாரங்கள், செப்டம்பர் 29 அன்று இருமல் சிரப்கள் குறித்து இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு (DCGI) WHO எச்சரித்தது.

மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உடனடியாக ஹரியானா ஒழுங்குமுறை ஆணையத்திடம் இந்த விஷயத்தை எடுத்து விரிவான விசாரணையைத் தொடங்கியதாக கூறப்படுகிறது. WHO எச்சரிக்கையின்படி, இந்தியாவில் தயாரிக்கப்படுவதாக கூறப்படும் நான்கு மருந்துகளில், ப்ரோமெதாசின் வாய்வழி தீர்வு, கோஃபெக்ஸ்மாலின் குழந்தை இருமல் சிரப், மாகோஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்ட் சிரப் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றுவரை, இந்த தயாரிப்புகளின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்து கூறப்பட்ட உற்பத்தியாளர் WHO-க்கு உத்தரவாதம் அளிக்கவில்லை என்றும் தயாரிப்புகளின் மாதிரிகளின் ஆய்வக பகுப்பாய்வு "அதில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவை மாசுக்களாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது எனவும் கூறப்படுகிறது. அந்த பொருட்கள் மனிதர்களுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவை மற்றும் உயிருக்கு ஆபத்தானவை. நச்சு விளைவு "வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிக்க இயலாமை, தலைவலி, மாற்றப்பட்ட மன நிலை மற்றும் கடுமையான சிறுநீரக காயம் ஆகியவை அடங்கும், இது மரணத்திற்கு வழிவகுக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.