Breaking

Thursday, 1 July 2021

அரசு ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல்

அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் நேற்று முதல் அமலாகியது. தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 12 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. 

இதில் அரசு ஊழியர்கள், அவர்களது குடும்பத்தில் தகுதியானவர்கள் ஆண்டுக்கு ரூ.4 லட்சம் வரை மருத்துவ சேவை பெறலாம். சிறப்பு சிகிச்சைகளுக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் வரை மருத்துவ சேவைகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு, யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் கம்பெனியுடன் 4 ஆண்டு கால ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தநிலையில், இந்த புதிய காப்பீட்டு திட்டம் நேற்று முதல் அமலாகியது. 

இத்திட்டம் வரும் 2025 ஜூன் 30 வரை 4 ஆண்டு காலத்துக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அமலில் இருக்கும். மேலும், காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்துள்ள 1,169 மருத்துவமனைகளில் 203 வகையான சிகிச்சைகளுக்கு, காப்பீட்டுத் தொகை அனுமதிக்கப்படும் என தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான வழிக்காட்டுதல்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

ஆண்டுக்குரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெறலாம்

அரியவகை சிகிச்சைக்குரூ.10 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்குரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். அரிய வகை சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவோர் ஆண்டுக்குரூ.10 லட்சம் வரை காப்பீட்டுத் தொகை மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இதற்காக ஒவ்வொரு அரசு ஊழியரிடம் இருந்தும் மாதந்தோறும்ரூ.300 பிடித்தம் செய்யப்படும்.

No comments:

Post a Comment