உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஆதார் திட்டம் அரசியல் சட்டரீதியாக செல்லும் என்று தீர்ப்பு அளித்தது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என்றும் உத்தரவிட்டது.
இதனையடுத்து, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஒன்றிய அரசு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என காலக்கெடு விதித்திருந்தது. பிறகு பல்வேறு காரணங்களால் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் 30-ந் தேதிக்குள் ஆதாருடன் பான் கார்டை இணைப்பது அவசியம் என்றும் அதனை செய்ய தவறினால் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனவும் ஜூலை 1-ந் தேதிக்கு பிறகும் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.
பிக்சட் டெபாசிட் போட்டிருப்பவர்களுக்கு 10 சதவீதத்திற்கு பதில் 20 சதவீதம் டிடிஎஸ் பிடிக்கப்படும் எனவும், 15ஜி, 15எச் படிவங்களை சமர்பிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதலாக 3 மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஒன்றிய இணை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். இதன்படி, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் கால அவகாசம் வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment