ஆதார் அட்டை மற்றும் பான் அட்டைகளை இணைக்கும் அவகாசம் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்தத் தேதிக்குள் இணைக்கத் தவறினால், உங்கள் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்கவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, 2019ம் ஆண்டு முதல் பலமுறை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு விட்டது. இருப்பினும், பலர் இன்னும் பான் - ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர்.
எனவே, இறுதியாக மார்ச் 31ம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்தது. அதன்பின் கொரோனா பரவலால் அந்த அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது, ஆதார் அட்டை மற்று பான் அட்டைகளை இணைக்கும் அவகாசம் வரும் 30ம் தேதியுடன் நிறைவடைவதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. அவ்வாறு இணைக்கத் தவறினால், உங்கள் பான் எண்ணை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்று வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment